Wednesday 9 December 2015

நலம் வாழ - எலுமிச்சையின் நற்பலன்கள்


 பழங்காலத்தில் யாராவது பெரிய மனிதர்களை சந்திக்க செல்லும்போது ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து செல்வார்கள். காரணம் அவர்கள் எவ்வளவு

கோபத்துடன் இருந்தாலும் அதை முகர்ந்துப் பார்த்தால் கோபம் பஞ்சாய் பறந்துவிடும். ஆனால் இப்பொழுது யாரும் அப்படி செய்வதில்லை. மேலும் இன்று பழச்சாறுக் குடித்தால் கூட எலுமிச்சையை யாரும் பெரிதாகக் கண்டுக்கொள்வதில்லை. ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழச்சாறுகளையே பெரும்பாலும் உட்கொள்கின்றனர்.

எலுமிச்சையின் பலன்களை அறிந்தால் இனி யாருக்கும் எலுமிச்சையைப் புறக்கணிக்க மனம் வராது.

1. எலுமிச்சை பழம் உடல் நலத்துடன், சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு உகந்தது

2. எலுமிச்சைப் பழச்சாறை தினம் குடித்து வந்தால் உடல் எடைக் குறையும்

3. செரிமானம் மற்றும் வாயுப் பிரச்சினை உள்ளவர்கள் சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் சாறு பிழிந்து குடித்தால் பிரச்சினை தீரும்.

4. இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது

5. பெண்கள் எலுமிச்சைச் சாறை தினம் குடித்து வந்தால் மார்பகப் புற்றுநோய் வராது

No comments:

Post a Comment