Friday 25 March 2016

மாட்டுத்தாவணி




நாலாபக்கமும் நாம் சுற்றும்போது பல ஊர்களையும் கடக்கிறோம். பல ஊரின் பெயர்கள் வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருக்கும். ஊர் சுற்றும்போது அதுப் போன்ற பெயர்களைப் பார்க்கும்போது அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என விவாதித்துக் கொண்டே செல்வது வழக்கம். சில ஊர்களுக்கு பெயரைக் கேட்டதும் நமக்குப் பொருள் அல்லது காரணம் விளங்கிவிடும். சில பெயர்கள் நாளடைவில் மருவி இன்று சம்பந்தமேயில்லாமல் வேறு ஏதோ ஒரு அர்த்தத்தை சுமந்து கொண்டு நிற்கும்.

சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி



எப்பொழுதும் படிப்பதற்கு ஏதேனும் ஒரு நல்ல புத்தகம் இருக்கவேண்டும். ஒன்று முடிந்தால் அடுத்தது தயாராக இருக்கவேண்டும். ஆனால் படிக்கும் புத்தகங்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பேன். படிப்பதில் ஆர்வம் இருந்தாலும் படிக்கும் புத்தகம் கதையானாலும், கட்டுரையானாலும் சுவையாகவும் இருக்க வேண்டும் அல்லவா! அதனால் புத்தகங்கள் வாங்குவதில் ஏனோதானோ என்றில்லாமல் அக்கறையுடன் வாங்குவது வழக்கம். அன்று தி.ஜானகிராமனின் மரப்பசு படித்து முடிக்கும் தருவாயில் அடுத்தப் புத்தகம் வாங்க அருகில் இருந்த கடைக்குச் சென்றேன். அது சின்ன கடைதான். அதிக புத்தகங்கள் இருக்காது. இருக்கும் புத்தகங்களில் பார்வையை ஓட்டினேன். எதிலும் சுவாரசியம் தட்டவில்லை. கடைசிப் புத்தகமாக இருந்தது நா.பார்த்தசாரதியின் சமுதாய வீதி.

Wednesday 23 March 2016

முதுமலை காட்டினிலே...


என் நண்பர்கள் என் சொந்த ஊர் என்ன முதுமலைக் காடா எனக் கேட்டுக் கிண்டல் செய்வார்கள். அந்த நேரத்தில் விளையாட்டாக சண்டை போட்டாலும் சில சமயங்களில் அதுவும் சரிதானோ எனத் தோன்றும். ஏனெனில் ஊட்டி சென்றால் முதுமலை போகாமல் வருவதில்லை. அது ஒரு அனுபவம். டிஸ்கவரி, அனிமல் பிளானட் போன்றச் சேனல்கள் பிரபலமடைந்ததற்கு ஒரு முக்கியக் காரணம்

Friday 18 March 2016

உறவினர்கள் என்றாலே தொல்லையா?




சீறும் பாம்பை நம்பினாலும் சொந்தக்காரனை நம்பாதே! நண்பன் மட்டுமே போதும்; சொந்தங்கள் என்றும் வேண்டாம். சொந்தக்காரனிடமிருந்து தூர விலகு. என உறவினர்களைப் பற்றி விதவிதமான புதுமொழிகள் வந்த வண்ணம் இருக்கிறது. நண்பர்கள் மட்டுமே சிறந்தவர்கள், நட்பே உயர்ந்த உறவு என இன்னொருப் பக்கம் நட்பை உயர்த்தியும் உருகி வருகின்றனர். அப்படியா! உண்மையில் சொந்தக்காரர்கள் என்றால் அவ்வளவு மோசமானவர்களா? உண்மையில் உறவினர்களை நாம் கிட்ட நெருங்க விடக்கூடாதா?

Tuesday 15 March 2016

கலோரி என்றால் என்ன?




எடை குறைக்க வேண்டும் என சொன்னதும் உடனே அனைவரும் ஏதோ ஃபார்முலா சொல்வது போல ’கம்மியா சாப்பிட்டு, வாக்கிங் போனா எடைக் குறைந்திடும்...’ என்கிறார்கள். இது சரிதான் ஆனால் என்ன, ஏன், எவ்வளவு, எப்பொழுது, எப்படி சாப்பிட வேண்டும் என அறிந்து சாப்பிட வேண்டும். இவ்வகையில் யார் சாப்பிட வேண்டும் என கேட்கவே தேவையில்லை. நோய் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எடை அதிகமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அனைவரும் சாப்பிடும் முறை அறிந்து உண்ண வேண்டும். பெரும்பாலானேர் என்ன உண்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் உண்டு விட்டு பின் அவதிப்படுகிறார்கள். சிலர் உணவுக் கட்டுப்பாடு என்றால் வயதானவர்களுக்கும், நோயாளிகளுக்கும், அதிக எடை உள்ளோருக்கு மட்டுமே உரித்தானது என நினைத்து கண்டப்படி உணவருந்தி நோயை வரவழைத்துக் கொள்கிறார்கள். நாம் ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புணர்வுடன் இருந்து வருமுன் காத்தல் நல்லதல்லவா!

Monday 7 March 2016

கண்களின் எதிரி கிளாக்கோமா பற்றி அறிவோம்



உலக க்ளகோமா கூட்டமைப்பும், உலக க்ளகோமா நோயாளிகளின் கூட்டமைப்பும் இணைந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் ஒரு வாரத்தை தேர்ந்தெடுத்து "உலக க்ளகோமா வாரம்” என்று கடைபிடிக்கின்றனர்.
க்ளகோமா நோயைப் பற்றி பலரும் தெரிந்து கொள்ளவும், ஒரு தனிப்பட்ட விழிப்பு உணர்வை மேம்படுத்தவும் அதன் மூலம் க்ளகோமா மூலம் ஏற்படும் பார்வை இழப்பினைத் தடுப்பதற்கும் விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்தவும் செய்கின்றனர்.

Thursday 3 March 2016

அய்யா வைகுண்டர்




ஆண்டுதோறும் மாசி 20 ஆம் தேதி ஆன்மீக சீர்திருத்தவாதியும், கடவுள் அவதாரமாக கருதப்படுபவருமான, அய்யா வைகுண்டர் அவதார தின விழா தலைமை பதி அமைந்துள்ள சாமித்தோப்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கன்னியாக்குமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் தமிழ்நாட்டில் அவரைப் பற்றி நன்கு அறிந்திருக்கலாம். ஆனால் மற்றப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. யார் அந்த அய்யா வைகுண்டர்?

Wednesday 2 March 2016

ஊட்டி ரயில் பயணம்



நீலகிரி மாவட்டம் எனக்கு ஏன் பிடிக்கும் என்பதை எழுதிவிட்டு எங்கள் டூர் பற்றி எழுத மிகுந்த இடைவெளி எடுத்துக் கொண்டுவிட்டேன். வேறு சில பணிகள் இருந்தது ஒரு காரணமாக இருந்தாலும் கூட என்னுடைய சோம்பேறித்தனத்தையும் நான் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் இனியும் தாமதித்தால் ஊட்டி டூர் சென்று வந்தது கூட மறந்துப் போய்விடும் எனக்கும் உங்களுக்கும். அதனால் இன்று இதை எழுதி முடித்துவிடுவது என்ற தீர்மானத்துடன் களமிறங்கிவிட்டேன்.

Tuesday 1 March 2016

மரப்பசு - தி. ஜானகிராமன்



மரப்பசு நேற்றுப் படித்து முடித்தேன். பழைய எழுத்தாளர்களில் என்னுடைய பேவரிட் கல்கி. அவருக்கு அடுத்தப்படியாக அகிலன். அவ்வரிசையில் தி.ஜானகிராமனின் எழுத்தும் எனக்குப் பிடித்தமானது.

அவரது எல்லாப் படைப்புகளிலும் தஞ்சாவூர் பிராமண சமுதாயத்தைப் பின்புலமாக வைத்து எழுதும் நடை எனக்குப் பிடிக்கும். பிராமாண பாஷை பிரவாகமாக ஓடும். அதில் அவரை மிஞ்ச ஆளில்லை.

கிமு கிபி - மதன்





நான் பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் எல்லோரும் கேட்ட, “அடுத்து என்ன க்ரூப் எடுக்கப் போற?” என்ற கேள்விக்கு அன்று நான் அளித்த பதில். “எந்த க்ரூப்பா இருந்தாலும் வரலாறு இருக்கக் கூடாது.”  என்ன படிக்கப்போறோம் என்பதை விட என்ன படிக்கக்கூடாது என்பதில் மிகக் குறிப்பாக இருந்தேன். வரலாறு மேல் எனக்கு அவ்வளவு காதல். ஆனால் இன்று வரலாற்றுப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்கிறேன். முதல் காரணம் பொன்னியின் செல்வன் என்பதை மறுப்பதற்கில்லை. அடுத்ததாக முக்கியக் காரணம் மதன்.

முன்னுரை







என்றோ பெய்த மழையில் இன்று நனைந்தும் ரசித்துக் கொண்டும் இருக்கும் என்னுடைய வாசிப்பில் என் பார்வையில் நான் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய ஒரு விமர்சனம்.