அன்று கூரியரில் வந்த திருமண பத்திரிக்கையைப்
பார்த்ததும் வக்கீல் விஸ்வநாதனுக்கு ஏற்பட்ட உணர்ச்சிக்கு என்ன பெயர் என்று அவருக்கேத்
தெரியவில்லை.
”என்னங்க கூரியர்? யார்ட்டயிருந்து வந்திருக்கு?”
எனக் கேட்டவாறு அவர் மனைவி கோகிலா வந்தாள்.
”என் ப்ரெண்ட் ராமமூர்த்தியோட பொண்ணுக்குக் கல்யாணமாம்.
பத்திரிக்கை அனுப்பியிருக்கான்.”
”நல்ல விஷயந்தான! அதுக்கு ஏன் பேயறஞ்ச மாதிரி
நிக்கறீங்க?”
”ம். நல்ல விஷயந்தான், ஆனா இந்த ரெண்டு பேரும்
ஏற்கெனவே கல்யாணமானவங்க.” ஆச்சர்யம் விலகாமல் பேசினார் விஸ்வநாதன்.
”என்ன உளர்றீங்க? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க…”
”அட! இந்த ரெண்டு பேரும் ஏற்கெனவே கல்யாணம் பண்ணிக்கிட்டு,
ஒருத்தருக்கொருத்தரு பிடிக்காமப் போயி விவாகரத்து செஞ்சிகிட்டாங்க. அவங்களுக்கு கல்யாணத்த
ரத்து செஞ்சு வச்ச வக்கீலே நான் தான்.”