Tuesday 3 May 2016

கமலாம்பாள் சரித்திரம்



நம் வரலாற்றை அறிய வரலாற்று நூல்கள் மட்டும் போதாது. வரலாறு முக்கியமானவர்களைப் பற்றியேக் குறிப்பிடும். சாமானிய மனிதனைப் பற்றி அறிய அது உதவாது. மாறாக சாதாரண மக்களின் வாழ்க்கை முறையை அறிய கலை இலக்கியமே நல்ல தேர்வு. பல காலகட்டங்களில் எழுதப்படும் கதைகள், கட்டுரைகள் என நாம் வாசிக்க வாசிக்க நம் அறிவு விரிவடைவதோடு, குறிப்பிட்ட காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது என்ற தெளிவான வடிவமும் கிடைக்கும். கமலாம்பாள் சரித்திரமும் அந்த வகையை சேர்ந்ததுதான்.