’உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது வழக்கு. உப்பில்லா சாப்பாட்டை நம்மால் ஒரு கவளம் கூட எடுத்து வாயில் வைக்க முடியாது. ஆனால் மனதிற்கு பிடித்த பெண்ணை மணப்பதற்காக உப்பில்லாமல் சாப்பிட சம்மதித்துப் பல யுகங்களாக உப்பில்லாமலேயே சாப்பிட்டு வரும் திருவிண்ணகரப்பன் என்னும் ஒப்பிலியப்பன் எழுந்தருளியிருக்கும் ஒப்பிலியப்பன் கோயிலுக்கு பிரவேசித்து அவரின் சிறப்பம்சங்களையும் தெரிந்துக்கொள்வோம்.