Thursday 23 June 2016

நல்லதோர் வீணை செய்தேன் - வரலொட்டி ரெங்கசாமி



சென்னையில் மழை வெள்ளம் காரணமாக ஜனவரியில் நடக்க வேண்டிய புத்தகத் திருவிழா சற்றுத் தாமதமாக ஜூன் மாதம் நடந்து முடிந்துள்ளது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் ஸ்டைலில் படு பிரமாண்டமாகவே இருந்தது. லட்சக்கணக்கான புத்தகங்களில் இருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது மிக மிக கடினம் என்பது என்னைப் போன்ற புத்தகப் பிரியர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தப் புத்தகக் கடலிலிருந்து ஒரு சில முத்துக்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடிந்தது. நான் வாங்கிய முத்துக்களில் முதலில் எதை வாசிப்பது என யோசித்தப்போது நான் தயங்காமல் தேர்ந்தெடுத்தது வரலொட்டி ரெங்கசாமி எழுதிய நல்லதோர் வீணை செய்தேன்.