Sunday, 28 February 2016

ஆலயபிரவேசம் - உச்சிப் பிள்ளையார் கோயில்

           

இந்தியா என்றதும் பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது பல கோடி ஆண்டுகள் பழமையான இமாலய மலைத்தொடர். ஆனால் அதை விடவும் பழமையான ஒரு சிறு மலைக்குன்று அதுவும் நம் தமிழ்நாட்டில் இருக்கிறதென்றால் நம்ப முடிகிறதா? திருச்சிராப்பள்ளியின் மத்தியில் அமைந்திருக்கும் 83மீட்டர் உயரமுள்ள ஒரு சிறிய மலைக்குன்று உலகின் மிகப் பழமையான மலைகளில் ஒன்று. இது கிட்டதட்ட 3800 மில்லியன் ஆண்டுகள் பழமையானது. அதனால் அதன் மதிப்பை மக்களுக்கு உணர்த்துவதற்காகதானோ என்னவோ முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் மலையுச்சியில் எழுந்தருளியிருக்கிறார்.  மலைக்கோட்டை என மக்களால் பிரபலமாக அழைக்கப்படும் திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில்தான் அந்த பெருமைக்குரியது.

Tuesday, 23 February 2016

ரொம்ப போரடிக்குதா உங்களுக்கு?



எப்பொழுதும் நேரமில்லை எனப் புலம்புவோர் ஒருபுறம் இருக்க, “ரொம்ப போரடிக்குது!” என அலுத்துக்கொள்வோர் இன்னொரு பக்கம். இப்பக்கத்தில் ஆண், பெண், சிறுவர்கள், முதியவர்கள் என எந்தவித பாரபட்சமுமில்லாமல் ஒரு பெரிய கூட்டமே உள்ளது. வீட்டில் உள்ள மற்றவர்கள் எல்லாம் பரபரப்பாக ஏதோ ஒன்று செய்துக் கொண்டிருக்க இவர்கள் மட்டும் எதற்கெடுத்தாலும் போரடிக்கிறது போரடிக்கிறது எனக் கூறி சுற்றி உள்ளவர்களை போரடிப்பர். அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களில் உள்ள குழந்தைகளும், வயதானவர்களும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை இது. முன் போல் இல்லாமல் இப்பொழுது எத்தனையோ பொழுதுப்போக்கு அம்சங்கள் வந்துவிட்டது. இருப்பினும் அவர்களுக்குள் ஏதோ ஒரு பரபரப்பு. அதிருப்தி.

ஆலய பிரவேசம் - வடபழனி முருகன் கோவில்

             


தமிழ்நாட்டின் சிறப்புகள் என்று எத்தனையோ இருந்தாலும் அதில் முதலிடம் பிடிப்பது தமிழ் கடவுள் முருகன் தான். ராமன் எத்தனை ராமனடி என திரைப்படப் பாடல் இருக்கிறது அதுப் போல முருகன் எத்தனை முருகனடி என்றே பாடலாம். தமிழ்நாட்டில் அத்தனை முருகன் பெயர்கள் இருக்கிறது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போகும் போது எதிரில் வரும் வாகனங்கள் மற்றும் கடைப் பெயர்களை கவனித்துக் கொண்டு வந்தால் முருகனுக்குத் தான் எத்தனை பெயர்கள் என பிரமிப்பாக இருக்கும். தமிழ்நாட்டில் அறுபடைவீடுகள் இருப்பது மட்டுமின்றி நிறைய பிரபலமான முருகன் கோயில்கள் இருக்கிறது. அதில் ஒன்று வடபழனி முருகன் கோயில்.

Thursday, 4 February 2016

பாம்புக் கடி மருந்து

பாம்பென்றால் படையும் நடுங்கும். பழைய மொழி தான் என்றாலும் பாம்பின் பாம்புக் கடியின் தீவிரத்தை உணர்த்தக் கூடிய பழமொழி. பாம்புக் கடித்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும்போது என்ன பாம்புக் கடித்தது என கேட்பதுண்டு. அதனால் சிலர், அடித்தப் பாம்பையும் கையோடு மருத்துவமனைக்கு எடுத்து வருவதுண்டு.   

இன்று நமக்கு 'இந்தி'யனே அந்நியன்

விஜய், அஜித் யாருக்கு ரசிகர்கள் அதிகம்? யாருடைய எந்த படம் எத்தனை கோடி வசூல் செய்தது? யார் நம்பர் 1?
இன்று நாட்டில் நடக்கும் பலப் பிரச்சினைகளுக்கு யார் காரணம்? கடந்த திமுக ஆட்சியின் அராஜகமா அல்லது ஆளும் அதிமுகவின் மெத்தனப் போக்கா? அடுத்த தேர்தலில் வெல்லப்போவது யார் அதிமுகவா, திமுகவா? அல்லது இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓட வைத்த பாஜக வா?
இதுப் போன்ற நம் விவாதங்கள் தொடர்ந்து சுபிட்சமாக நடக்கவேண்டும் என்றால் அதற்கு முதலில் நம் வாழ்க்கை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் இருக்கவேண்டும்.